ஐபிஎல் வரலாற்றை மாற்றி எழுதிய லோகேஷ் ராஹுல்..! பிரமாண்ட சாதனை!! video
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லோகேஷ் ராஹுல் 14 பந்துகளில் 50 ஓட்டங்களை கடந்து ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
11வது ஐபிஎல் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையில் இந்த போட்டி இடம்பெற்று வருகிறது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 166 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பில் அணித்தலைவர் கௌதம் கம்பிர் 55 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றுக்கொண்டார்.இந்நிலயில் , 167 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் பஞ்சாப் அணி சற்று முன்னர் வரை 5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட் இழப்பிற்கு 64 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இந்த போட்டியில் , பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லோகேஷ் ராஹுல் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
அவர் 14 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பெற்று ஐபிஎல் வரலாற்றில் வேகமான அரைச்சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.இதற்கு முன்னர் , சுனில் நரேன் மற்றும் யூசுப் பதான் ஆகியோர் 15 பந்துகளில் 50 ஓட்டங்களை கடந்தமையே சாதனையாக இருந்தது.
இந்நிலையில் , குறித்த சாதனையை 14 பந்துகளில் கடந்து லோகேஷ் ராஹுல் புதிய சாதனையை படைத்துள்ளார் 6 நான்கு ஓட்டங்கள் மற்றும் 4 ஆறு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment